×

மே 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் முன்னாள் அமைச்சர் பெரியசாமி பேச்சு

க.பரமத்தி, ஏப்.22:  மே 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் பெரியசாமி  பேசினார்.அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலையொட்டி திமுக செயல்வீரர்கள், ஆலோசனை கூட்டம்  க.பரமத்தியில் நடைபெற்றது.அரவக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளர் மணியன் வரவேற்றார். க.பரமத்தி ஒன்றிய செயலாளர் .கருணாநிதி தலைமை வகித்தார். திமுக மாவட்ட பொறுப்பாளரும், வேட்பாளருமான செந்தில்பாலாஜி, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் சொத்து பாதுகாப்பு குழு செயலாளருமான கே.சி.பழனிசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர்ராஜேந்திரன், விவசாய அணி தலைவர் சின்னசாமி, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, ஆகியோர்  பேசினர்.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது : வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது.

தமிழகத்தின் மக்களவை தொகுதி 40இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.நிச்சயம் மே 23ம் தேதிக்கு பிறகு மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்ல ஆட்சி அமையும்.. இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், வேட்பாளர் செந்தில்பாலாஜி பேசியதாவது :மக்களவை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும், சட்டமன்ற தொகுதியிலும் வாகைசூடும் .அதை பார்த்த பிறகு அன்று மாலையே தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்திக்க செல்வார். எதற்காக என்றால், தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பதற்காக நிச்சயம் செல்வார். கரூர் மாவட்டம் இனி எப்போதும் திமுக கோட்டை என்பதை நிரூபிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், 30ஊராட்சி செயலாளர்கள், பிரதிநிதிகள், கிளைக் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Periyasamy ,Stalin ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி...