மலைமேல் ஏறி மாணவன் தற்கொலை முயற்சி திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு

திருப்பரங்குன்றம், ஏப்.22: திருப்பரங்குன்றம் மலை மேல் ஏறி இசை கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை டவுன்ஹால் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் சூரிய கோபாலகிருஷ்ணன் (21). இவர் தனியார் இசை கல்லூரியில் இராண்டாமாண்டு பயின்று வருகிறார். இவருடைய கல்லூரியில் இவருக்கு முறையாக பயிற்சி அளிக்கவில்லை என கூறி நேற்று காலை திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதையறிந்த பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: