மதுரை, ஏப். 22: மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் நடைபெற்றுள்ள குண்டு வெடிப்பில் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடும் கண்டனத்துக்குரியது, ஈவுஇரக்கமற்ற இது போன்ற கொடூர வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இதில் ஐ.நா.மன்றமும், இந்தியாவும் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.