போலீஸ் பிடியில் வாலிபர் கல்வித்துறை அதிகாரி வீட்டில் 27 பவுன் நகை திருட்டு

மதுரை, ஏப். 22:மதுரையில் கல்வித்துறை அதிகாரி வீட்டை உடைத்து 27 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை எஸ்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் முருகேசன். கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் முருகேசன் வெளியூர் சென்றார். நேற்று காலை பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து முருகேசனுக்கு, உறவினர்கள் செல்போனில் தகவல் கொடுத்தனர். முருகேசனின் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 27 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: