பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

ஒட்டன்சத்திரம், ஏப்.22: ஒட்டன்சத்திரம் பகுதிக்குட்பட்ட பள்ளிவாசலில் பராஅத் இரவு சிறப்பு தொழுகையை முஸ்லிம்கள் நடத்தினர். ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் உள்ள டவுன் பள்ளி, தர்கா பள்ளி, மதினா பள்ளி, வடக்கு பள்ளி, சாலைப்புதூர், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, விருப்பாட்சி, ஸ்ரீராமபுரம், உள்ளிட்ட பள்ளிகளில் புனித சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இறைவழிப்பாட்டுடன் கூடிய சிறப்பு தொழுகை பயான், சிறப்பு துஆ உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் டவுன் பள்ளியில் மதரசா மாணவர்களின் நிகழ்ச்சிகளுடன் கூடிய விழா நடைபெற்றது.

Related Stories: