நத்தம், ஏப். 22: நத்தம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்(21). ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிராஜூதீன் இருவரும் சிறுகுடி சென்று விட்டு நத்தம் நோக்கி டூவீலரில் திரும்பினர். அப்போது சடையம்பட்டி அருகே உள்ள வளைவு ரோட்டில் வந்த போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தனர். இதில் தூக்கி வீசப்பட்டதில் முகமது இஸ்மாயில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே முகமது இஸ்மாயில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த சிராஜூதீன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்தவர் ஜெயராஜ்(46). இவர் நத்தம் வந்துவிட்டு மதுரைக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டு இருந்தார். பெருமாள்பட்டி அருகே சென்ற போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் இறந்து போனார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.