கணவரை கத்தியால் குத்திய மனைவி

சங்கரன்கோவில், ஏப். 22: திருவேங்கடத்தைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன் (44). மனைவியை பிரிந்த வாழ்ந்த இவரும், சங்கரன்கோவில் பாரதி நகரைச் சேர்ந்த கணவரை பிரிந்த மாலை(34) என்பவரும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.  இந்நிலையில் செந்தூர்பாண்டியனுக்கும், மாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாலா கணவரை பிரிந்து பாரதிநகரில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.  இந்நிலையில் நேற்று செந்தூர்பாண்டியன் பாரதிநகருக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாலை கத்தியால் செந்தூர்பாண்டியனின் வயிற்றின் இடது பக்கத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: