பூசாரி விஷம் குடித்து சாவு

கோவில்பட்டி, ஏப்.22: கோவில்பட்டி அருகே வடக்கு செமப்புதூர் கிழக்கு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சண்முகவேல் (37). இவர் டி.சண்முகபுரத்தில் உள்ள கோயிலில் பூஜை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி சண்முகவேல் விஷம் குடித்ததையடுத்து, அவரை கோவில்பட்டி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகவேல் இறந்தார். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: