சாத்தான்குளம் அருகே பகலில் ஒளிரும் தெருவிளக்கு அதிகாரிகள் கவனிப்பார்களா?

சாத்தான்குளம், ஏப்.22: சாத்தான்குளம் அருகே போலையர்புரம் விலக்கில் பகலிலும் தெரு விளக்கு எரிந்து வருவதால் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட போலையர்புரம் விலக்கில் தட்டார்மடம் செல்லும் சாலையோரம்  மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் வசதிக்காக தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் இரவில் எரிவதுடன் பகலிலும் தொடர்ந்து ஓளிர்கிறது. மின் சிக்கனத்தை மக்களுக்கு  வலியுறுத்தும் அதிகாரிகள் இதனை கண்டும் காணாமல் இருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து  பகலில் எரியும் தெருவிளக்குகளை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: