குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

கழுகுமலை, ஏப். 22: ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி அழகிய நகரை சேர்ந்தவர் சரவணன்(40). இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று சரவணன், குடும்பத்துடன் கழுகுமலை அருகே அத்திப்பட்டியில் உறவினர் சண்முகராஜ் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மதிய உணவருந்திய பிறகு உறவினர்களுடன் அங்குள்ள குளத்திற்கு சென்று குளித்து கொண்டிருந்தனர். ஆழப்பகுதியில்  சகதியில் சிக்கிக்கொண்ட சரவணன், வெளியே வர முடியாமல் மூழ்கி இறந்தார். தகவலறிந்த குருவிகுளம் போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் துணையுடன் குளத்தில் மூழ்கி இறந்த சரவணனின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து குருவிகுளம் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில் குளத்தில் மூழ்கி சரவணன் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: