வாகனம் மோதி இருவர் படுகாயம்

எட்டயபுரம், ஏப்,22: எட்டயபுரம் அருகே உள்ள வேலிடுபட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த அழகிரி மகன் மாரியப்பன் (55). அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் (47). இவர்கள் இருவரும் நேற்று இருக்கண்குடி மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக பைக்கில் சென்றனர். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் துரைச்சாமிபுரம் விலக்கு அடுத்து சாலையை கடக்கும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் படுகாயமடைந்த இருவரையும்  மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

Related Stories: