×

இளம்பெண் மாயம்

பாகூர், ஏப். 22:  தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் தேவன் (50), மீனவர். இவரது மகள் அனுசுயா (22). இவர், இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இதற்கிடையே, தேவன், தனது மனைவி மற்றும் மகள் அனுசுயாவுடன் கடந்த சில மாதங்களாக தவளக்குப்பம் லலிதா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி காலை 8 மணிக்கு அனுசுயா வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை தேவன், தவளக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து மாயமான அனுசுயாவை தேடி வருகின்றனர். 

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...