தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை

திருக்கோவிலூர், ஏப். 22:  திருக்கோவிலூர் அடுத்த கணக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயபுஷ்பா(16). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். இந்த நிலையில் சரியாக படிக்காமலும், வீட்டில் இருக்கும் வேலைகளை சரிவர செய்யாமலும் இருந்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை ஜெயபால் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் புவனேஸ்வரி கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: