×

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரம்

விழுப்புரம், ஏப். 22:  விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு ரூ.40 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சியர், எஸ்பி அலுவலகம். டிஐஜி, வனத்துறை, மாவட்ட கல்வித்துறை, தாசில்தார் அலுவலகம், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர், கருவூலம் உள்ளிட்ட அனைத்துத்துறை மாவட்ட அலுவலகங்களும் ஒரே இடத்தில் உள்ளது. பெருந்திட்ட வளாகத்தை சுற்றி மதில் சுவர்கள் உள்ளன. ஆனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. மனுகொடுக்க வருபவர்களில் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவமும் நடந்து வருகிறது. இதனை தடுத்து கண்காணிக்க வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை எழுந்து வந்தன. இதை தொடர்ந்து ரூ.40 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்க ஆட்சியர் நிதி ஒதுக்கீடு செய்து இதற்கான பணிகள் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தொடங்கியது. மூன்று இடங்களில் கேட் வைத்து சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது முன்பகுதியில் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 450 மீட்டர் தூரத்திற்கு இந்த சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது.

Tags : District Collectorate Office ,
× RELATED நான் முதல்வன் நிரல் திருவிழா