×

சாலையில் தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

ரிஷிவந்தியம், ஏப். 22: ரிஷிவந்தியத்தில் சுமார் பத்தாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு மெயின் ரோட்டின் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பள்ளிக்கு மிக அருகில்  கழிவுநீர் தேங்கியுள்ளது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் உள்ளது.  இப்பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதி உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் கழிவுநீர் செல்வதற்கு போர்க்கால அடிப்படையில் வாய்க்கால் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...