வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

திருவெண்ணெய்நல்லூர், ஏப். 22: திருச்சி பொன்னகர் பகுதியை சேர்ந்தவர் அருளழகன் மகன் கார்த்திக்(24). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்றுகார்த்தியும், அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் கார்முகிலன் மகன்அஸ்வின்(24) என்பவரும் பைக்கில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கிசென்று கொண்டிருந்தனர். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் நான்கு வழி சாலை சந்திப்பில் வந்தபோது, பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார்.  இதுகுறித்து அருளழகன், திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் அளிததார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: