×

ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி

வேலூர், ஏப். 22: அணைக்கட்டு தாலுகா புலிமேடு அடுத்த குடிசை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(60). இவர் நேற்று முன்தினம் காலை புலிமேடு பஸ் நிறுத்தம் அருகில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் சைக்கிளின் பின்பக்கம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கண்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...