×

ஜோலார்பேட்டை அருகே கோஷ்டி மோதலில் 3 பேர் படுகாயம்

ஜோலார்பேட்டை, ஏப்.22: ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராகுல்(20), கார் டிரைவர். அச்சமங்கலத்தை சேர்ந்த நடராஜனின் மகன்கள் அனுமுத்து(27), அஜித் (24) ஆகியோர் கடந்த 14ம் தேதி ராகுலிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நின்றிருந்த ராகுலிடம் அனுமுத்துவும், அஜித்தும் தகராறு செய்தனர். இதில் ராகுலை, கத்தி மற்றும் இரும்பு ராடால் சரமாரி தாக்கியுள்ளனர். ராகுலும் திருப்பி கத்தியால் தாக்கினாராம்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை சமாதானம் செய்து படுகாயம் அடைந்த 3 பேரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஜோலார்பேட்டை போலீசில் இருதரப்பினரும் புகார் செய்தனர். அதன்பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : clash ,Jolarpettai ,
× RELATED நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள்...