பழைய காட்பாடியில் அவதூறு வீடியோ கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேலூர், ஏப். 22: குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை அவதூறாக பேசிய வாட்ஸ் அப் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியில் நேற்று காலை 50க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காட்பாடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘அவதூறு வீடியோ வெளியிட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: