பேரணாம்பட்டு, ஏப்.22: பேரணாம்பட்டு அப்ரார் மஜீத் தெருவை சேர்ந்தவர் முக்தியார்(39), டீக்கடை தொழிலாளி. இவரது மனைவி சபியா(28). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சபியா வழக்கம்போல் நேற்று காலை குளிப்பதற்காக அடுப்பில் வெந்நீர் காயவைத்தார். அப்போது, விறகின் மீது மண்ணெண்ணெய் ஊற்றியபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து தீ மளமளவென உடல் முழுவதும் பரவி அலறினார்.