வெந்நீர் காயவைத்த போது சேலையில் தீப்பிடித்து பெண் பலி

பேரணாம்பட்டு, ஏப்.22: பேரணாம்பட்டு அப்ரார் மஜீத் தெருவை சேர்ந்தவர் முக்தியார்(39), டீக்கடை தொழிலாளி. இவரது மனைவி சபியா(28). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சபியா வழக்கம்போல் நேற்று காலை குளிப்பதற்காக அடுப்பில் வெந்நீர் காயவைத்தார். அப்போது, விறகின் மீது மண்ணெண்ணெய் ஊற்றியபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து தீ மளமளவென உடல் முழுவதும் பரவி அலறினார்.

இதைப்பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்த சபியா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: