×

கோடை வெயில் எதிரொலி சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு வியாபாரிகள் வேதனை

தண்டராம்பட்டு, ஏப்.22: கோடை வெயிலின் தாக்கத்தால் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்த அணையை தீபாவளி, பொங்கல், புத்தாண்டு மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து சுற்றிப்பார்த்து மகிழ்கின்றனர். மேலும், இங்கு சிறுவர்களும் விளையாடி மகிழ்வார்கள்.

இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. பயணிகள் வருகையை எதிர்பார்த்து கடை வைத்துள்ள வியாபாரிகள் எதிர்பார்த்த அளவுக்கு கடையில் விற்பனை இல்லை எனக்கூறி வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags : visitor ,Summer Weil Echo Sattanar Dam ,visitors ,visit ,
× RELATED தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா...