×

திருவண்ணாமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன், ₹1 லட்சம் திருட்டு மர்ம ஆசாமிகள் துணிகரம்

திருவண்ணாமலை, ஏப்.22: திருவண்ணாமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை, ₹1 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் குபேர நகர் 2வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் கோபால்(68). இவர் தனது வீட்டு அருகே பங்க் கடை நடத்தி வருகிறார். பவுர்ணமியை நாட்களில் கிரிவலப்பாதையில் கோபால் குளிர்பான கடை வைப்பது வழக்கம். அதன்படி இந்த பவுர்ணமிக்கும் கிரிவலப்பாதையில் கடை வைத்திருந்ததால், கோபால் மற்றும் அவரது மனைவி வீட்டுக்கு வரவில்லையாம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம ஆசாமிகள் கடந்த 19ம் தேதி இரவு கோபால் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு பீரோவில் வைத்திருந்த 5 சவரன் செயின், 3 சவரன் கம்மல், ரொக்கம் ₹1 லட்சம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் காலை வீடு திரும்பிய கோபால் தனது வீட்டில் திருட்டு நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : sareen ,Thiruvannamalai 8 ,theft mystery lovers darling ,
× RELATED இயக்குநர்-நடிகர் சேரனின் தந்தை காலமானார்