பாய்லர் வெடித்து வாலிபர் படுகாயம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அமராவதிபட்டினம் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்காலை உள்ளது. இங்கு, வடமாநிலங்களை சேர்ந்த ஊழியர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன், ஊழியர்கள் இரவு பணியில் ஈடுபட்டபோது திடீரென, அங்கிருந்த பாய்லர் வெடித்து சிறியது. இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்விலாஸ் (28) என்ற வாலிபர் படுகாயமடைந்தார்.

சக ஊழியர்கள் அவரை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடந்த 5ம் தேதி காளியாம்பூண்டி கிராம  தனியார் இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து 5 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: