சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அமராவதிபட்டினம் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்காலை உள்ளது. இங்கு, வடமாநிலங்களை சேர்ந்த ஊழியர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன், ஊழியர்கள் இரவு பணியில் ஈடுபட்டபோது திடீரென, அங்கிருந்த பாய்லர் வெடித்து சிறியது. இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்விலாஸ் (28) என்ற வாலிபர் படுகாயமடைந்தார்.