சென்னை: துபாயில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், சிகரெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து எமரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முகமது கவுஸ் (37), திருச்சியை சேர்ந்த அப்ஸர் அலி (26) ஆகிய 2 பேர், சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று திரும்பினர். சுங்க அதிகாரிகள் அவர்களது உடமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. ஆனாலும், அவர்கள் மீது சந்தேகம் தீராததால், அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, கர்நாடக மாநில பயணியின் உள்ளாடையில் 500 கிராம் தங்க கட்டிகள் இருப்பதை கண்டு பிடித்தனர். அதேபோல் திருச்சியைச் சேர்ந்த பயணியிடம் 600 கிராம் தங்க கட்டி வெள்ளி முலாம் பூசப்பட்டு அவரது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தார்.