அடுக்குமாடி குடியிருப்பில் தீ

மாதவரம்: மாதவரம் தபால் பெட்டி பிரான்சிஸ் காலனி 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள மின்மாற்றி நேற்று திடீரென வெடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்த குடியிருப்புவாசிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் மின்மாற்றியில் இருந்த வயர்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: