பெண் டிஎஸ்பி வீட்டில் 13 சவரன் கொள்ளை

சென்னை: மேற்கு மாம்பலம் கோதண்டராமன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஈஸ்வரி (60). இவர் தமிழக காவல் துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஈஸ்வரி கடந்த வாரம் தனது குடும்பத்துடன் பழனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அண்ணாநகர் மேற்கு பகுதியில் வசித்து வரும் ஈஸ்வரியின் சகோதரி சுப்புலட்சுமி, நேற்று காலை தனது சகோதரி வீட்டை பார்க்க வந்துள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த செயின், வளையல் என 13 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து சுப்புலட்சமி குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் பெற்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: