சென்னை: மேற்கு மாம்பலம் கோதண்டராமன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஈஸ்வரி (60). இவர் தமிழக காவல் துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஈஸ்வரி கடந்த வாரம் தனது குடும்பத்துடன் பழனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அண்ணாநகர் மேற்கு பகுதியில் வசித்து வரும் ஈஸ்வரியின் சகோதரி சுப்புலட்சுமி, நேற்று காலை தனது சகோதரி வீட்டை பார்க்க வந்துள்ளார்.