அண்ணாநகர்: அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் விஜயன் (48) என்பவர், குடிநீர் தொட்டி விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து, அதில் கிடைத்த ரூ.19 லட்சத்தை அலுவலகத்தில் உள்ள மேஜை லாக்கரில் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து அலுவலகத்தை பூட்டிவிட்டு விஜயன் வீட்டுக்கு சென்றார். வழக்கம்போல், நேற்று காலை அலுவலகத்தை திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.