கிரிக்கெட் விளையாட்டில் தகராறு பிளேடால் சிறுவன் கழுத்தறுப்பு

பெரம்பூர்: கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நாராயண பாபு. இவரது மகன் பிரவீன் (15), பைக் மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (30) என்பவரும், பிரவீனும் பணத்தை பந்தயமாக வைத்து கிரிக்ெகட் விளையாடினர். இதில் பிரவீன் வெற்றி பெற்றதால் பந்தய பணத்தை கேட்டுள்ளான். ஆனால், பணம் தரமுடியாது என்று கூறி ஜெகதீஷ் தகராறில் ஈடுபட்டார். பின்னர், கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் பீரவீனின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காயமடைந்த பிரவீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஜெகதீஷை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:  கொருக்குப்பேட்டை ஸ்டான்லி நகர் 5வது  தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (31). முன்விரோதம் காரணமாக கடந்த 19ம் தேதி அம்பேத்கர் நகரை ேசர்ந்த  இளவரசன் (28) மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் ராஜேஷை தாக்கியுள்ளனர். அப்போது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை  எடுத்து ராஜேஷை குத்தியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து  ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய இளவரசனை நேற்று கைது செய்தனர். தப்பியோடிய அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

Related Stories: