பெரம்பூர்: நடந்து முடிந்த தேர்தலில் வடசென்னை பகுதியில் சிறப்பாக பணியாற்றிய அமமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் 36வது வட்ட செயலாளர் செல்வராஜ், வியாசர்பாடி எம்கேபி நகர் 9வது தெருவில் நேற்று முன்தினம் இரவு மது விருந்து வைத்தார். இதில், அக்கட்சியை சேர்ந்த பலர் கலந்துகொண்டு மது அருந்தினர். அப்போது, சர்மா நகர் 8வது தெருவை சேர்ந்த அக்கட்சி இளைஞர் அணி பொருளாளர் ராமு (51) என்பவரும், சர்மா நகர் 2வது தெவை சேர்ந்த கட்சியின் உறுப்பினர் ஜெயக்குமார் (32) என்பவரும், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம்கொடுத்தது தொடர்பாக பேசியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.