சாத்தான்குளம் அருகே கார் மோதி பெண் பலி

சாத்தான்குளம், ஏப்.21:  சாத்தான்குளம் அருகே கோயில் பகுதியில் தூங்கிய பெண் மீது கார் ஏறியதில் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார். சாத்தான்குளம் அருகே விஜயராமபுரத்தில் ஞானக்கரை சுவாமி கோயில் கொடை நடந்து வருகிறது. அந்த கோயிலில் அன்னதானம் நடந்தது. அதில் சாத்தான்குளம் காந்திநகர் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மனைவி பேச்சியம்மாள் (52) பங்கேற்றார். பின்னர் அவர் கோயில் அருகே அருகே தரையில் படுத்திருந்ததார். அப்போது விஜயராமபுரத்தை சேர்ந்த லட்சுமணன் (53) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக பேச்சியம்மாள் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கஜேந்திரன் தலைமையிலான போலீசார், உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசார் வழக்குபதிந்து லட்சுமணனை கைது செய்தனர்.

Related Stories: