ரயில் மோதி கட்டிட தொழிலாளி பலி

சேலம், ஏப்.21: சேலம் அருகேயுள்ள மாமாங்கம் பெரியமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(58), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ரயில், அவர் மீது மோதி விட்டுச் சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட கணேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமர் பட்டாபிஷேக விழா

Related Stories: