தாம்பரத்தில் கள்ள ஓட்டு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த முடிச்சூர், கம்பர் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (35). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியாராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை ஓட்டளிப்பதற்காக பெரம்பலூரில் இருந்து முடிச்சூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தபோது, உங்கள் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டுவிட்டது என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் என் ஓட்டை வேறு யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டனர் என கூறி வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீண்ட நேரம் கழித்து 49பி விதிப்படி 17பி படிவத்தில் கையெழுத்திடப்பட்டு  17 ஏ படிவம் மூலம் ஓட்டளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories: