தாம்பரம்: தாம்பரம் அடுத்த முடிச்சூர், கம்பர் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (35). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியாராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை ஓட்டளிப்பதற்காக பெரம்பலூரில் இருந்து முடிச்சூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தபோது, உங்கள் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டுவிட்டது என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.