திருச்சி, ஏப். 19: திருச்சி செந்தண்ணீர்புரத்திலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் அலுவலரின் செல்போன் மாயமானது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் சோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர். மக்களவை தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிவரை விறுவிறுப்புடன் நடந்தது. இதில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால் அதனை சரி செய்து அதன்பின் காலதாமதமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் செந்தண்ணீர்புரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. கூட்டம் அதிகளவில் இருந்ததால் ஒவ்வொருவரின் பெயரை கூர்ந்து கவனித்து ஆய்வு செய்து பின்னரே வாக்கு மைய அலுவலர்கள் வாக்குப்பதிவிற்கு அனுமதி அளித்தனர்.