திருச்சி, ஏப்.19: மணப்பாறையில் ஒரு வாக்காளர் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்ததை போட்டோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி, கரூர் மக்களவை தொகுதிக்குள் வருகிறது. காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, அதிமுக சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட 43 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குச்சாவடிக்குள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பது தேர்தல் ஆணையம் உத்தரவு. ஆனால், மணப்பாறை, சின்னக்கடைவீதியை சேர்ந்த மணி என்ற புல்லட்மணி என்கிற இளைஞர்கள் வாக்குச்சாவடி ஒன்றில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு அதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.