மேட்டூர், ஏப்.19: 8 வழிச்சாலை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மேட்டூர் சட்டமன்ற தொகுதியில், 315 வாக்குச்சாவடிகளில் 2,74,372 வாக்காளர்கள் உள்ளனர். நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது கிராமங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். மேச்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘விவசாயிகளின் ஆதரவு எங்களுக்கு அதிகம் உள்ளது. வலிமையான இந்தியா, வளமான தமிழகம் அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்,’ என்றார்.