ஓமலூர், ஏப்.19: ஓமலூர் அருகே புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் நடராஜன். இவருக்கும், ஏற்காட்டை சேர்ந்த சுரேஷ் மகள் ஷாலினிக்கும், நேற்று காலை ஓமலூர் அருகே சின்னத்திருப்பதி கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் மாலையும், கழுத்துமாக புளியம்பட்டி வாக்குச்சாவடி மையத்திற்கு மணமக்கள் வந்தனர். இந்த வாக்குச்சாவடியில் நடராஜூக்கு மட்டுமே வாக்கு உள்ளதால் அவர் வரிசையில் நின்று வாக்களித்தார். இதையடுத்து, இருவரும் உடனடியாக காரில் ஏற்காட்டிற்கு கிளம்பிச் சென்று, ஷாலினி வாக்களித்தார். அதற்கு பிறகே மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.