டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு

விக்கிரவாண்டி, ஏப். 19: விக்கிரவாண்டி தொகுதியில் கூட்ட நெரிசல் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் டோக்கன் கொடுத்து ஓட்டுப்பதிவு நடந்தது. நேற்று கடுமையான வெயில் இருந்ததால் பிற்பகல் 4 மணிவரை சராசரியான கூட்டத்துடன் ஓட்டு பதிவுகள் நடந்தது.மாலை 4 மணிக்கு பிறகு வாக்காளர்கள் ஓட்டு போட வந்து வரிசையில் நின்றனர். மாலை 6 மணிவரை ஓட்டு பதிவு முடிந்த பிறகும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்றிருந்ததால் அவர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு செய்ய அனுமதித்தனர். மாலை 6.45 மணிவரை ஓட்டுப்பதிவு நடந்தது. இதேபோல், விழுப்புரம் அருகே கொளத்தூரில் டோக்கன் வழங்கப்பட்டு இரவு 6.45 வரை வாக்குப்பதிவு நடந்தது.

Related Stories: