அவிநாசி அருகே சிவளாபுரியம்மன் கோயில் குண்டம் விழா

அவிநாசி, ஏப். 17:  அவிநாசி தாலுகா நடுவச்சேரி கோமளவல்லி உடனமர் கோட்டீஸ்வர சுவாமி கோயில் தேவஸ்தானத்துக்குட்பட்ட சிவளாபுரியம்மன் கோயில் 33ம் ஆண்டு குண்டம் திருவிழா ஏப்.14ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதில் நேற்று (16ம் தேதி) அதிகாலை 2.30 மணிக்கு குதிரை உத்தரவு பெறுதல், அதிகாலை 3 மணிக்கு அம்மனுக்கு படைக்கலம் எடுத்து வருதல், அதிகாலை 5 மணிக்கு காப்புக்கட்டி பூசாரிகளும், வீரமக்களும் குண்டம் இறங்கினர். நாளை (17ம் தேதி) மறு பூஜை, மஞ்சள்நீர், சுவாமி திருவீதி உலாவருதல் நடக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் லோகநாதன், விழா கமிட்டியினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்துள்ளனர்.

Related Stories: