ஜெயங்கொண்டம், ஏப். 10: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு ஆதிதிராவிட நல பள்ளிக்கு கல்விசீர் வழங்கும் விழா நடந்தது.
மருத்துவர் ஜெயராமன் தலைமை வகித்தார். வக்கீல்கள் கோகுல், சேதுராமன் முன்னிலை வகித்தனர். திருமால்வளவன், பழனிவேல், மணிகண்டன், கார்மேகம் சிறப்புரையாற்றினர். மாணவர்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி, தேச தலைவர்களின் படங்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் கடிகாரம் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று பள்ளி தலைமை ஆசிரியர் ராஜதுரையிடம் வழங்கினர். விழாவில் உதவி ஆசிரியை பாரதி மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பேராசிரியர் தேவேந்திரன் வரவேற்றார். சிவகனகசபை நன்றி கூறினார்.