×

பைக்குகள் மோதல் இருவர் காயம்

ஜெயங்கொண்டம், ஏப்.10: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் வடிவேல்(32). இவர் சம்பவத்தன்று மாலை தான் பணி செய்யும் தனியார் ஜவுளிக்கடைக்கு தனது பைக்கில் ஜெயங்கொண்டம் நான்குரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயங்கொண்டம் மலங்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் மகன் ராஜஒளி(26) என்பவர் ஓட்டி வந்த பைக் வடிவேல் பைக் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் எஸ்ஐ  வசந்த் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது