×

ஜெயங்கொண்டம் அருகே கூரை வீட்டில் தீ ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

ஜெயங்கொண்டம், ஏப்.3: ஜெயங்கொண்டம் அருகே கூரை வீட்டில் ஏற்பட்ட தீயில் ரூ.2லட்சம் பொருட்கள் எரிந்து சேதமானது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம்(65) முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் காலையில் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு அவரும் அவரது மனைவி ராஜலட்சுமி(50) இருவரும் வரதராஜன்பேட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான காய்கறி கடைக்கு சென்று விட்டனர். திடீரென வீடு  தீப்பற்றி எரிந்தது.  இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க போராடினர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் நிலைய அதிகாரி ஏழுமலை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 12,600 ரொக்க பணம், டிவி, மரக்கட்டில் மர பீரோ, கிரைண்டர், மின்விசிறி, மிக்சி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரம் உள்ளிட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்துசேதமானது.

Tags : fire ,roof ,Jayankondam ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா