×

உரிய ஆவணமின்றி பைக்கில் எடுத்து சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்

அரியலூர், ஏப். 3: அரியலூர் அருகே உரிய ஆவணங்களின்றி பைக்கில் எடுத்து சென்ற ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டம் சித்தேரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழப்பழுவூர் சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் பைக்கில் வந்தார். அந்த பைக்கை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில் பைக்கில் ரூ.2 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.2 லட்சத்தை இலரா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் சார்நிலை கருவூலத்தில் ரூ.2 லட்சத்தை ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்