×

கரும்பு வெட்டும் தொழிலாளி மர்மச்சாவு

ஜெயங்கொண்டம், ஏப். 3:   கள்ளக்குறிச்சி அடுத்த வி.பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மூக்கன் (37). இவர் இவரது ஊரை சேர்ந்தவர்கள் வெளியூரில் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு குழுவாக செல்வது வழக்கம். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே காட்டாத்தூர் கிராமத்துக்கு குழுவாக கரும்பு வெட்டும் பணிக்கு வந்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மூக்கன், கரும்பு வெட்டி விட்டு இரவில் படுத்து தூங்கினார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு செல்வதற்காக மூக்கனை எழுப்பினர். அவர் எழுந்திருக்காததால் சந்தேகமடைந்து உறவினர் கொளஞ்சி, ஆண்டிமடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூக்கன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.

Tags : Sugarcane cutting worker ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...