×

திருவாடானை பகுதி மக்கள் அறிவிப்பு பட்டை நாமத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இளைஞர்

ராமநாதபுரம், மார்ச் 26:  ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு பட்டை நாமத்துடன் பட்டதாரி இளைஞர் ஜெயபாண்டி வந்தார். அவருடன் வந்த இரண்டு இளைஞர்களும் நாமத்துடன் வந்தனர். வித்தியாசமாக வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்திய போலீசார் நெற்றியில் நாமத்துடன் செல்லக் கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இளைஞர்கள் நாமத்தை அகற்றி விட்டு தேர்தல் அதிகாரி கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு தாக்கல் செய்தார்.

பின்னர் சுயேட்சை வேட்பாளர் ஜெயபாண்டி கூறுகையில், வேலையில்லா பட்டதாரியான நான், சுயேட்சையாக போட்டியிடுகிறேன். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் முன் வரவேண்டும். நாட்டில் பல இளைஞர்களுக்கு வேலையில்லை. படிப்பதற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வேலையில்லை. வெளிநாட்டிலும் வேலையில்லை. வேலைதான் இல்லையென்றால் அரசியல் தளத்திலும் இடமில்லை. பட்டம் படித்த இளைஞர்களுக்கு பட்டை நாமமே மிச்சம். அதனால் தான் தேர்தல் களத்திற்கு  வந்துவிட்டோம் என்றார்.

Tags : Tiruvatanai ,
× RELATED திருவாடானை அருகே வயலில் வைத்த தீயால் 25 ஆடுகள் கருகி பலி