×

மாணவிகளுக்கு பணி ஆணை

கீழக்கரை, மார்ச் 26: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 582 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சேக்தாவூது, முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முகைதீன் அப்பாஸ், டீன் முகமது ஜகாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான கேட்டர் பில்லர் நிறுவனத்தின் பொதுமேலாளர் அன்பு செழியன் மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அலாவுதீன், வேலை வாய்ப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் அ.சேக்தாவூது ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை