×

வேடிக்கை பார்க்கும் போலீசார் விதிமீறிய பயணங்களால் காத்திருக்கும் ஆபத்து

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 26:  ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன ஒட்டிகள் போக்குவரத்து விதிகளை மறந்து விதிமுறைக்கு மாறாக வாகனங்களை இயக்குவதால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் சாலை விதியை முற்றிலுமாக மறந்து பொருட்களை ஏற்றும் வாகனங்களில் அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் டிராக்டர், லாரி போன்ற வாகனங்களில் அளவுக்கு அதிகமாகவும், உயரமாகவும் பாரங்களை ஏற்றிச் செல்கின்றனர்.
இதுபோன்ற செயல்களால் எதிர்பாராத விதமாக உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படுகின்றன. கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னர் கூட அதிகமான பாரம் ஏற்றிச் சென்ற லாரி, மின்கம்பியில் உரசி தீ பற்றி எரிந்து லாரி சேதமடைந்ததோடு அந்த ஒட்டுனரும் உயிரிழந்தார்.

எனவே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை ஒட்டுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், சாலை விதிகள் என ஒன்று இருந்தும் பெரும்பாலானோர் அதனை கடைபிடிப்பதில்லை. போலீசாரும் சோதனையின் போது பெரும்பாலும் ஹெல்மெட் அணியாதவர்களை மட்டுமே கவனிக்கின்றனர். அதிக பாரம் ஏற்றி செல்வது, வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்பவர்களையும் கண்டுகொள்வதில்லை. அதேபோல் சிறு சிறு பசங்கள் டூவீலர் ஒட்டுகின்றனர். இதனால் நாடு முழுவதும் நாளுக்கு நாள் விபத்து அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விலை மதிப்பெற்ற உயிர்கள் ஒரு நொடியில் போய் விடும் வாய்ப்புள்ளது. ஆகையால் இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விபத்து இல்லா பகுதியாக நமது பகுதியை பாதுகாக்க உதவ வேண்டும் என்றார்.

Tags : journeys ,
× RELATED சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்...