×

வயிற்றுவலியால் அவதி விஷம் குடித்து பெண் தற்கொலை

வலங்கைமான்.மார்ச்26: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த கல்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி அலமேலு(40) . கணவரை பிரிந்த நிலையில் அலமேலு தனது மகன் அன்பரசனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வயிற்றுவலி காரணமாக கடந்த 24ம் தேதி மாலை வயலுக்கு சென்றவர் பூச்சிமருந்தினை குடித்துவிட்டு கிடந்துள்ளார். இதையடுத்து அலமேலுவை குடந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அலமேலு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து வலங்கைமான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை