×

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 16 பேர் வேட்புமனு

தஞ்சை, மார்ச் 26: தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று வரை 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த  19ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. வேட்புமனு தாக்கல்  செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். கடந்த 19ம் தேதி ஒரு வேட்பாளர் கூட  வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால்  அன்றைய தினம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியே காணப்பட்டது.  இதையடுத்து 20ம் தேதி சுயேட்சை வேட்பாளர் பனசை அரங்கன் வேட்புமனு  தாக்கல் செய்தார். 21ம் தேதி சுயேட்சை வேட்பாளர்கள் ராஜேந்திரன்,  அலெக்சாண்டர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 22ம் தேதி சுயேட்சை  வேட்பாளர் சசிகுமார், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆகியோர்  வேட்புமனு தாக்கல் செய்தனர். 23, 24ம் தேதிகள் விடுமுறை  நாட்கள் என்பதால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது. நேற்று காலை திமுக, தமாகா  வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். நேற்று  வரை தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 16 பேர், 22 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Tags : constituency ,Tanjai ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...