×

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

கோவில்பட்டி, மார்ச் 26:  பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கோவில்பட்டியில் நடந்த போலீசாருக்கான பயிற்சி வகுப்பில் எஸ்பி பேசினார். நாடாளுமன்ற தேர்தலை யொட்டி கோவில்பட்டி, விளாத்திகுளம், வாஞ்சிமணியாச்சி காவல்துணை கோட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கான பயிற்சி வகுப்பு கோவில்பட்டியில் நடந்தது. எஸ்.பி.முரளிரம்பா தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ஏடிஎஸ்பி பொன்ராமு முன்னிலை வகித்தார். கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் வரவேற்றார்.

பயிற்சியின் போது தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றும் காவல்துறையினர், தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சியினர் முறையாக பின்பற்றுகின்றனரா? என்பதை கண்காணிக்க வேண்டும், பாதுகாப்பு பணிகளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் பதற்றமான வாக்குசாவடிகள் அமைந்துள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பல்வேறு பாதுகாப்பு ஆலோசனைகளை மாவட்ட எஸ்.பி.முரளிரம்பா வழங்கினார். விளாத்திகுளம், வாஞ்சிமணியாச்சி டிஎஸ்பிக்கள் ஜெயகுமார், ரவிச்சந்திரன், தேர்தல் கட்டுப்பாட்டு டிஎஸ்பி பால்துரை, மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பு டிஎஸ்பி லிங்கதிருமாறன், எஸ்பி பிஆர்ஓ சத்தியநாராயணன், கோவில்பட்டி மேற்கு, கிழக்கு இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், சுதேசன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், டிராபிக் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : polling stations ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...