சாத்தான்குளம், மார்ச் 26: சாத்தான்குளம் செயின்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி 24ம் ஆண்டுவிழா நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி தலைமை வகித்தார். உதவி சேகரகுரு ஷீலாபாஸ்கர் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி முதல்வர் சார்லஸ் ஞானக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சிகளை ஆசிரியை பிரவீனா தொகுத்து வழங்கினார். விழாவில் முதலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அன்றனி, முத்துக்கிருஷ்ணாபுரம் ராஜ்மோகன், டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லெட்சுமி நாராயணன், வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலாளர் மகாபால்துரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மருத்துவர் முகம்மது அபுபக்கர் சித்திக், ஜமாஅத் தலைவர் மெஹ்தூம், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் ஆகியோர் விளையாட்டு போட்டி மற்றும் கல்வியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் ஓவிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சாத்தான்குளத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ-, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி முதல்வர் சார்லஸ் ஞானக்குமார் நன்றி கூறினார்.